மத்தேயு
ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 11
சுற்றியுள்ள நகரங்களில்: அநேகமாக, அந்தப் பகுதியில் (கலிலேயாவில்) இருந்த யூத நகரங்களைக் குறிக்கின்றன.
கற்பிப்பதற்கும் பிரசங்கிப்பதற்கும்: மத் 4:23-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
கிறிஸ்து: இந்தப் பட்டப்பெயரின் அர்த்தம், “அபிஷேகம் செய்யப்பட்டவர்.” கிரேக்கில் இந்த வசனத்தில் “கிறிஸ்து” என்ற வார்த்தைக்கு முன்பு நிச்சயச் சுட்டிடைச்சொல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இயேசுதான் வாக்குக் கொடுக்கப்பட்டிருந்த மேசியா, அதாவது விசேஷ அர்த்தத்தில் அபிஷேகம் செய்யப்பட்டிருந்த ஒருவர், என்பதை இது காட்டுகிறது.—மத் 1:1; 2:4-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.
வரவேண்டியவர்: அதாவது, “மேசியா.”—சங் 118:26; மத் 3:11; 21:9; 23:39.
தொழுநோயாளிகள்: மத் 8:2-க்கான ஆராய்ச்சிக் குறிப்பையும், சொல் பட்டியலில் “தொழுநோய்; தொழுநோயாளி” என்ற தலைப்பையும் பாருங்கள்.
இதோ!: மத் 1:23-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
உண்மையாகவே: மத் 5:18-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
ஸ்நானகரைவிட: வே.வா., “அமிழ்த்தியெடுப்பவர்; முக்கியெடுப்பவர்.”—மத் 3:1-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
மக்கள் தீவிரமாக அடைய முயலுகிற லட்சியமாக இருக்கிறது; அப்படித் தீவிரமாக அடைய முயலுகிறவர்கள்: ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்ட இரண்டு கிரேக்க வார்த்தைகள், “தீவிரமாக அடைய முயலுகிற” என்றும் “தீவிரமாக அடைய முயலுகிறவர்கள்” என்றும் இங்கே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன; இந்த வார்த்தைகள், மிக மும்முரமாக ஏதோவொன்றை செய்வதை அல்லது செய்ய முயற்சி எடுப்பதைக் குறிக்கின்றன. இவை எதிர்மறையான அர்த்தத்தைத் தருவதாக, அதாவது வன்முறையாகத் தாக்குவதையோ தாக்கப்படுவதையோ குறிப்பதாக, சில பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் நினைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த வார்த்தைகள், “உற்சாகத்தோடு ஒன்றை நாடித் தேடுவதை; மிக ஊக்கமாக ஒன்றை அடைய முயலுவதை” குறிக்கின்றன; இதை இந்த வசனத்தின் சூழமைவும், லூ 16:16-ல் உள்ள வார்த்தைகளும் காட்டுகின்றன. (பைபிளில் மத் 11:12 தவிர, லூ 16:16-ல் மட்டும்தான் இந்தக் கிரேக்க வினைச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.) சிலர் யோவான் ஸ்நானகர் பிரசங்கித்ததைக் கேட்டு பெரிய மாற்றங்கள் செய்ததை அல்லது தீவிரமாக முயற்சிகள் எடுத்ததை இந்த வார்த்தைகள் அநேகமாக விவரிக்கின்றன. அவர்கள் அவ்வளவு தீவிரம் காட்டியதால் கடவுளுடைய அரசாங்கத்தின் உறுப்பினர்களாக ஆகும் வாய்ப்பைப் பெற்றார்கள்.
தீர்க்கதரிசனப் புத்தகங்களும் . . . திருச்சட்டமும்: மற்ற வசனங்களில், திருச்சட்டம் முதலாவதாகவும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள் இரண்டாவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன. (மத் 5:17; 7:12; 22:40; லூ 16:16); ஆனால், இங்கு மட்டும் தலைகீழாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அடிப்படையில், இரண்டுமே ஒரே அர்த்தத்தைத் தருவதாகத் தெரிகிறது. (மத் 5:17-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.) இருந்தாலும் இந்த வசனம், பைபிளிலுள்ள தீர்க்கதரிசனங்களை அதிகமாக வலியுறுத்துவதுபோல் தெரிகிறது. திருச்சட்டமும்கூட ‘தீர்க்கதரிசனங்களை அறிவித்ததாக’ இந்த வசனம் சொல்கிறது. இப்படி, அதில் தீர்க்கதரிசனங்கள் அடங்கியிருந்ததை இது வலியுறுத்துகிறது.
எலியா: “யெகோவா என் கடவுள்” என்ற அர்த்தத்தைத் தரும் எபிரெயப் பெயர்.
நெஞ்சில் அடித்துக்கொண்டு: தாங்க முடியாத துக்கத்தினாலோ குற்றவுணர்வினாலோ வருத்தத்தினாலோ கைகளால் திரும்பத் திரும்ப நெஞ்சில் அடித்துக்கொள்வதைக் குறிக்கிறது.—ஏசா 32:12; நாகூ 2:7; லூ 23:48.
சாப்பிடவும் இல்லை, குடிக்கவும் இல்லை: அநேகமாக, யோவான் தன்னைத்தானே வருத்திக்கொண்டு வாழ்ந்ததை, அதாவது விரதம் இருந்ததையும் நசரேயராக எந்த மதுவையும் குடிக்காமல் இருந்ததையும், குறிக்கிறது.—எண் 6:2-4; மத் 9:14, 15; லூ 1:15; 7:33.
மனிதகுமாரனோ: மத் 8:20-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
வரி வசூலிப்பவர்களுக்கும்: மத் 5:46-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
கப்பர்நகூமே: மத் 4:13-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
வானம்வரை: மிகவும் விசேஷமான நிலையில் இருப்பதைக் குறிப்பதற்காக இங்கே உருவகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கல்லறைவரை: வே.வா., “ஹேடீஸ்வரை.” இது இறந்தவர்களின் நிலையைக் குறிக்கிறது. (சொல் பட்டியலில் “கல்லறை” என்ற தலைப்பைப் பாருங்கள்.) இந்த வசனத்தில், இது அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது; அதாவது, கப்பர்நகூம் தாழ்த்தப்படும் என்பதைக் குறிக்கிறது.
உனக்குக் கிடைக்கும் தண்டனை: ‘உனக்கு’ என்ற வார்த்தை கிரேக்கில் ஒருமையில் கொடுக்கப்பட்டிருக்கிறது; அநேகமாக, அந்த நகரத்தைக் குறிக்கிறது.
உனக்குச் சொல்கிறேன்: இங்கே ‘உனக்கு’ என்ற வார்த்தை கிரேக்கில் பன்மையில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
சிறுபிள்ளைகளுக்கு: வே.வா., “சிறுபிள்ளை போன்றவர்களுக்கு.” மனத்தாழ்மையாகவும் கற்றுக்கொள்ள ஆர்வமாகவும் இருப்பவர்களைக் குறிக்கிறது.
பாரமான சுமையைச் சுமக்கிறவர்களே: ‘பாரமான சுமை சுமந்தவர்களை,’ அதாவது கவலையால் துவண்டுபோயிருந்த அல்லது உழைத்துக் களைத்துப்போயிருந்த ஆட்களை, தன்னிடம் வரும்படி இயேசு அழைத்தார். மதத் தலைவர்கள் திருச்சட்டத்தோடு நிறைய பாரம்பரியங்களைச் சேர்த்திருந்ததால், யெகோவாவின் வணக்கம் மக்களுக்குப் பாரமாக ஆகியிருந்தது. (மத் 23:4) புத்துணர்ச்சி தர வேண்டியிருந்த ஓய்வுநாளும்கூட பாரமாக ஆகியிருந்தது.—யாத் 23:12; மாற் 2:23-28; லூ 6:1-11.
நான் உங்களுக்குப் புத்துணர்ச்சி கொடுப்பேன்: “புத்துணர்ச்சி” என்பதற்கான கிரேக்க வார்த்தை ஓய்வெடுப்பதைக் குறிக்கலாம் (மத் 26:45; மாற் 6:31), அல்லது களைப்பு நீங்கி புதுத்தெம்பு பெறுவதையும் குறிக்கலாம் (2கொ 7:13; பிலே 7). இந்த வசனத்தின் சூழமைவைப் பார்க்கும்போது, இயேசுவின் “நுகத்தடியை” (மத் 11:29) ஏற்றுக்கொள்வது ஓய்வெடுப்பதை அல்ல, சேவை செய்வதைக் குறிக்கிறது. இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் கிரேக்க வினைச்சொல் செய்வினை வடிவத்தில் இருப்பதால், இயேசுவே புத்துணர்ச்சி கொடுப்பதைச் சுட்டிக்காட்டுகிறது; சோர்ந்துபோனவர்கள் தன்னுடைய மென்மையான, லேசான நுகத்தடியை விரும்பி ஏற்றுக்கொள்வதற்காக அவர்களுக்குப் புதுத்தெம்பையும் பலத்தையும் அவர் அளிப்பதைக் குறிக்கிறது.
சாந்தமும்: மத் 5:5-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
மனத்தாழ்மையுமாக: நே.மொ., “இதயத்தில் தாழ்மையாக.” இதற்கான கிரேக்க வார்த்தை, பகட்டாக இல்லாமல் பணிவாக இருப்பதைக் குறிக்கிறது. இது யாக் 4:6; 1பே 5:5 ஆகிய வசனங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது; அங்கே ‘தாழ்மை உள்ளவர்கள்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கடவுளையும் மற்றவர்களையும் ஒருவர் கருதுகிற விதமும், அவர்களுக்கு முன்பாக அவர் நடந்துகொள்கிற விதமும், அவருடைய அடையாளப்பூர்வ இதயத்தின் நிலையைக் காட்டுகின்றன.
என் நுகத்தடியை உங்கள் தோள்மேல் ஏற்றுக்கொண்டு: அதிகாரத்துக்கும் அறிவுரைக்கும் அடிபணிவதைக் குறிப்பதற்காக “நுகத்தடி” என்ற வார்த்தையை இயேசு அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தினார். இரட்டை நுகத்தடியைப் பற்றி இயேசு இங்கே சொல்லியிருந்தால், கடவுள் தன்மேல் வைத்த நுகத்தடியைத் தன்னோடு சேர்ந்து சுமக்கும்படி தன் சீஷர்களை அழைக்கிறார் என்றும், அதைச் சுமக்க அவர்களுக்கு அவர் உதவுவார் என்றும் அர்த்தம். இந்த அர்த்தத்தின்படி, “என்னோடு சேர்ந்து என் நுகத்தடியின் கீழ் வாருங்கள்” என்றும் இந்த வார்த்தைகளை மொழிபெயர்க்கலாம். ஒருவேளை, மற்றவர்கள்மேல் தான் வைக்கும் நுகத்தடியைப் பற்றி அவர் சொல்லியிருந்தால், தன் சீஷராகத் தன்னுடைய அதிகாரத்துக்கும் அறிவுரைக்கும் அடிபணிய வேண்டும் என்று அவர் அர்த்தப்படுத்தியிருப்பார்.—சொல் பட்டியலில் “நுகத்தடி” என்ற தலைப்பைப் பாருங்கள்.