மீன்வலையைப் பழுதுபார்த்தல்
மீன்வலைகள் விலை உயர்ந்தவையாக இருந்தன. அவற்றைப் பராமரிப்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. ஒவ்வொரு தடவையும் மீன்பிடித்துவிட்டு வந்த பிறகு மீனவர்கள் அவற்றைப் பழுதுபார்க்கவும், அலசவும், காயவைக்கவும் வேண்டியிருந்தது. அதற்கே அவர்களுடைய பெரும்பாலான நேரம் செலவானது. (லூ 5:2) மீன்வலைகளைப் பற்றி எழுதியபோது மத்தேயு மூன்று கிரேக்க வார்த்தைகளைப் பயன்படுத்தினார். டீக்டியான் என்ற பொதுப்படையான வார்த்தை, அநேகமாகப் பல விதமான வலைகளைக் குறிக்கலாம். (மத் 4:21) சாஜீனே என்ற வார்த்தை, படகிலிருந்து போடப்பட்ட பெரிய இழுவலையைக் குறித்தது. (மத் 13:47, 48) ஆம்ஃபைபிள்ஸ்ட்ரான் என்ற வார்த்தை சின்ன வலையைக் குறித்தது. அதன் அர்த்தம் “வீசப்பட்ட ஒன்று.” கரையில் அல்லது கரைக்குப் பக்கத்தில் இருந்த மீனவர்கள் அநேகமாக ஆழமில்லாத தண்ணீரில் இந்த வலையை வீசியிருக்கலாம்.—மத் 4:18.
சம்பந்தப்பட்ட வசனம்: