போருக்குத் தயாராக இருக்கும் ரோமப் படை அதிகாரி
ரோமப் படை அதிகாரி நூறு வீரர்களுக்கு அதிகாரியாக இருந்தார். ஒரு சாதாரண வீரருக்குக் கிடைத்த பதவிகளிலேயே மிகப் பெரிய பதவி அதுதான். படை அதிகாரி, போர் வீரர்களுக்குப் பயிற்சி கொடுத்தார்; அவர்களுக்கு ஆயுதங்களும் உணவுப்பொருள்களும் மற்ற பொருள்களும் கிடைக்கும்படி பார்த்துக்கொண்டார்; அதேசமயத்தில், அவர்கள் சரியாக நடந்துகொள்ளும்படியும் பார்த்துக்கொண்டார். ரோமப் படை வீரர்கள் எந்தளவுக்குத் திறமையாகவும் வேகமாகவும் செயல்பட்டார்கள் என்பது மற்ற எவரையும்விட படை அதிகாரியையே சார்ந்திருந்தது. பொதுவாக, ரோமப் படையில் இருந்த மற்ற யாரையும்விட இவர் அதிக அனுபவசாலியாகவும் முக்கியமானவராகவும் இருந்தார். அதனால்தான், தன்னிடம் வந்து உதவி கேட்ட படை அதிகாரியின் மனத்தாழ்மையையும் விசுவாசத்தையும் இயேசு மிகவும் பாராட்டினார்.
சம்பந்தப்பட்ட வசனம்: