யோவான் ஸ்நானகரின் உடையும் தோற்றமும்
யோவான் ஒட்டக ரோமத்தால் செய்யப்பட்ட உடையைப் போட்டிருந்தார். சின்னச் சின்னப் பொருள்களை எடுத்துச்செல்வதற்கு வசதியாக இடுப்பில் தோல் வாரைக் கட்டியிருந்தார். தீர்க்கதரிசியான எலியாவும் இதேபோன்ற உடையைத்தான் போட்டிருந்தார். (2ரா 1:8) ஒட்டக ரோமத்தாலான துணி சொரசொரப்பாக இருந்தது. பொதுவாக, ஏழைகள்தான் அவற்றை உடுத்தினார்கள். ஆனால் பணக்காரர்கள், பட்டுத் துணியால் அல்லது நாரிழைத் துணியால் செய்யப்பட்ட விலை உயர்ந்த உடைகளை உடுத்தினார்கள். (மத் 11:7-9) பிறந்ததிலிருந்தே யோவான் ஒரு நசரேயராக இருந்ததால், ஒருவேளை தன்னுடைய தலைமுடியை வெட்டியிருக்கவே மாட்டார். அவர் எளிமையான வாழ்க்கை வாழ்ந்ததையும்... கடவுளுடைய விருப்பத்தைச் செய்ய தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்ததையும்... அவருடைய உடையும் தோற்றமும் பளிச்சென்று காட்டியிருக்கும்.
சம்பந்தப்பட்ட வசனங்கள்: