உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g22 எண் 1 பக். 13-15
  • 4 | நம்பிக்கை இழந்துவிடாதீர்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • 4 | நம்பிக்கை இழந்துவிடாதீர்கள்
  • விழித்தெழு!-2022
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஏன் அவசியம்?
  • இவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள்
  • இதைச் செய்துபாருங்கள்
  • பைபிள் நம்பிக்கை தருகிறது
  • உண்மையான நம்பிக்கை எங்கிருந்து கிடைக்கும்?
    பைபிள் தரும் பதில்கள்
  • கடவுள் தந்த வேதம் நம்பிக்கை தருகிறது
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • கடவுள் தந்த வேதம் நம்பிக்கை தருகிறது
    இன்றும் என்றும் சந்தோஷம்!​—கடவுள் சொல்லும் வழி: ஓர் அறிமுகம்
  • 2024-ல் நம்பிக்கை பிறக்குமா?​—பைபிள் என்ன சொல்கிறது?
    வேறுசில தலைப்புகள்
மேலும் பார்க்க
விழித்தெழு!-2022
g22 எண் 1 பக். 13-15
பூ ஜாடிக்குப் பக்கத்தில் திறந்துவைக்கப்பட்ட பைபிள் இருக்கிறது.

தத்தளிக்கும் உலகம்

4 | நம்பிக்கை இழந்துவிடாதீர்கள்

ஏன் அவசியம்?

கஷ்டங்களால் நிறைந்திருக்கும் இந்த உலகத்தைப் பார்க்கும்போது நிறைய பேர் உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்படுகிறார்கள்; நம்பிக்கை இழந்துவிடுகிறார்கள். அதனால் என்ன செய்கிறார்கள்?

  • சிலர் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கவே கூடாது என்று இருக்கிறார்கள்.

  • வேறு சிலர் கவலைகளை மறக்க குடிக்கிறார்கள் அல்லது போதைப்பொருள்களை எடுத்துக்கொள்கிறார்கள்.

  • இன்னும் சிலர் வாழ்வதற்குப் பதிலாக சாவதே மேல் என்று யோசிக்கிறார்கள். ‘வாழ்ந்து என்னத்த சாதிக்கப்போறோம்’ என்று கேட்கிறார்கள்.

இவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள்

  • இன்றைக்கு நீங்கள் அனுபவிக்கிற கஷ்டங்கள் இப்படியே தொடரும் என்று சொல்லிவிட முடியாது. வாழ்க்கை நல்லபடியாக மாறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

  • உங்கள் சூழ்நிலை மாறவில்லை என்றாலும் பிரச்சினைகளைச் சமாளிக்க கண்டிப்பாகச் சில வழிகள் இருக்கும்.

  • பைபிள் நம்பிக்கை கொடுக்கிறது. மனிதர்களுடைய எல்லா பிரச்சினைகளுக்கும் ஒட்டுமொத்தமாக ஒரு தீர்வு வரப்போகிறது என்று சொல்கிறது.

இதைச் செய்துபாருங்கள்

பைபிள் சொல்கிறது: “நாளைக்காக ஒருபோதும் கவலைப்படாதீர்கள். நாளைக்கு நாளைய கவலைகள் இருக்கும். அந்தந்த நாளுக்கு அதனதன் பாடுகள் போதும்.”—மத்தேயு 6:34.

இன்றைய நாளைப் பற்றி மட்டுமே யோசியுங்கள். நாளைக்கு என்ன செய்யப்போகிறோம் என்றே கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் இன்றைக்கு செய்ய வேண்டிய விஷயங்களைக் கோட்டை விட்டுவிடுவீர்கள்.

‘இப்படி நடந்துவிடுமோ! அப்படி நடந்துவிடுமோ!’ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் மன அழுத்தம்தான் அதிகமாகும், நிலைமை சரியாகும் என்ற நம்பிக்கையும் குறைந்துவிடும்.

எப்படிச் சமாளிக்கலாம்?—இதோ சில டிப்ஸ்

நல்ல விஷயங்களை மட்டுமே யோசியுங்கள்

மனநிறைவோடு இருக்கும் ஒரு பெண், ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டிருக்கிறார்.

பைபிள் சொல்கிறது: “கஷ்டத்தில் தவிப்பவனுக்கு எல்லா நாளும் திண்டாட்டம்தான். ஆனால், இதயத்தில் சந்தோஷமாக இருப்பவனுக்கு எப்போதும் விருந்துக் கொண்டாட்டம்தான்.” (நீதிமொழிகள் 15:15) பிரச்சினைகளைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தால் கண்முன் இருக்கிற தீர்வு தெரியாமல் போய்விடும். ஆனால், நம்பிக்கையோடு இருந்தால் பிரச்சினையை எப்படிச் சமாளிப்பது என்று யோசிக்க முடியும்.

  • செய்திகளைப் பார்க்கும் நேரத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள். அதைப் பற்றி அதிகமாக யோசிக்காதீர்கள்.

  • ஒவ்வொரு நாள் முடியும்போதும், அந்த நாளில் நடந்த இரண்டு அல்லது மூன்று நல்ல விஷயங்களைப் பற்றி யோசித்துப்பாருங்கள்.

  • ஒரு நாளில் என்னவெல்லாம் செய்யலாம் என்று ஒரு லிஸ்ட் போடுங்கள். செய்ய முடிந்ததை மட்டும் எழுதுங்கள். பெரிய வேலைகளைச் சின்ன சின்னதாகப் பிரித்துச் செய்யுங்கள். அப்போதுதான், அந்த நாளின் முடிவில் நிறைய வேலைகளைச் செய்த திருப்தி உங்களுக்குக் கிடைக்கும்.

உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்

வயதான ஒருவர் ஒரு இளைஞரிடம் ஆறுதலாக பேசிக்கொண்டிருக்கிறார்.

பைபிள் சொல்கிறது: “தன்னைத் தனிமைப்படுத்துகிறவன் . . . எல்லா ஞானத்தையும் ஒதுக்கித்தள்ளுகிறான்.” (நீதிமொழிகள் 18:1) புதைகுழியில் மாட்டிக்கொண்ட ஒருவரால் தானாகவே வெளியே வர முடியாது. ஆனால், இன்னொருவரின் உதவி இருந்தால் வெளியே வர முடியும்.

  • குடும்பத்தில் இருக்கிறவர்களிடமும் நண்பர்களிடமும் உதவி கேளுங்கள்.

  • மற்றவர்களுக்கு நீங்கள் எப்படி உதவி செய்யலாம் என்று யோசியுங்கள். அப்படிச் செய்யும்போது, நம் பிரச்சினைகளெல்லாம் ஒன்றுமே இல்லை என்று தோன்றும்.

  • வாழ்க்கையில் பிடிப்பே இல்லாமல், ‘எதுக்குதான் வாழ்றோமோ’ என்ற எண்ணம் அடிக்கடி வந்தால் டாக்டரைப் பார்ப்பது நல்லது. ஏனென்றால், இது மன அழுத்தம் மாதிரியான பிரச்சினைகளின் அறிகுறியாக இருக்கலாம். மருத்துவ உதவி பெற்ற பிறகு நிறைய பேருக்கு இந்தப் பிரச்சினை சரியாகி இருக்கிறது.a

a எந்த ஒரு குறிப்பிட்ட மருத்துவ சிகிச்சையையும் விழித்தெழு! சிபாரிசு செய்வது கிடையாது.

பைபிள் நம்பிக்கை தருகிறது

ஒரு கவிஞர் கடவுளிடம் வேண்டும்போது இப்படிச் சொன்னார்: “உங்களுடைய வார்த்தை என் கால்களுக்கு விளக்காகவும், என் பாதைக்கு வெளிச்சமாகவும் இருக்கிறது.” (சங்கீதம் 119:105) பைபிள், அவர் சொல்வதுபோல் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்:

கும்மிருட்டான ஒரு ராத்திரியில் தடுமாறாமல் நடந்து போவதற்கு விளக்கு உதவும். அதேமாதிரி, நாம் குழப்பத்தில் இருக்கும்போது நல்ல முடிவுகளை எடுக்க பைபிள் உதவும்.

நாம் போகும் பாதையில் வெளிச்சம் இருந்தால் தூரத்தில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். வாழ்க்கைப் பாதையில் தூரத்தில், அதாவது எதிர்காலத்தில், என்ன நடக்கப்போகிறது என்று தெரிந்துகொள்ள பைபிள் உதவும்.

பைபிள் ஒரு புனிதமான புத்தகம். மனிதர்களின் ஆரம்பத்தைப் பற்றி மட்டுமல்ல, எதிர்காலத்தைப் பற்றியும் அது சொல்கிறது. இந்தக் கேள்விகளுக்கு பைபிள் பதில் சொல்கிறது:

எப்படி?

பிரச்சினைகள் எப்படி ஆரம்பித்தன? “ஒரே மனிதனால் பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது. இப்படி, எல்லா மனிதர்களும் பாவம் செய்ததால் மரணம் எல்லா மனிதர்களுக்கும் பரவியது” என்று பைபிள் சொல்கிறது.—ரோமர் 5:12.

ஏன்?

மனித அரசாங்கங்களால் ஏன் பிரச்சினைகளைச் சரிசெய்ய முடியவில்லை? “மனுஷனுக்கு . . . தன் காலடிகளை நடத்தும் அதிகாரம் இல்லை” என்று பைபிள் சொல்கிறது. (எரேமியா 10:23) இதற்கு, இன்றைய நிலைமைகளே அத்தாட்சி!

என்ன?

பிரச்சினைகளைச் சரிசெய்ய கடவுள் என்ன செய்யப்போகிறார்? “அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார். இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது” என்று பைபிள் சொல்கிறது.—வெளிப்படுத்துதல் 21:4.

“பைபிளை ஏன் படிக்க வேண்டும்?” என்ற வீடியோவில் வரும் காட்சி. ஒரு மனைவி, பைபிளில் இருந்து தெரிந்துகொண்ட ஒரு விஷயத்தை தன் கணவரிடம் சொல்கிறார்.

அதிகம் தெரிந்துகொள்ள: பைபிளை ஏன் படிக்க வேண்டும்? என்ற வீடியோவைப் பாருங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்