பாடம் 16
கடவுள் மீதுள்ள அன்பை காட்டுங்கள்
ஒருவரை நண்பராக வைத்துக்கொள்வதற்கு, நீங்கள் அவருடன் பேச வேண்டும். அவர் சொல்வதை நீங்கள் கேட்கிறீர்கள், நீங்கள் சொல்வதை அவர் கேட்கிறார். நண்பரைப் பற்றிய நல்ல விஷயங்களையும் மற்றவர்களிடம் சொல்கிறீர்கள். கடவுளுடைய நண்பராக இருப்பதும் இதைப் போலத்தான். இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை கவனியுங்கள்:
ஜெபத்தில் கடவுளிடம் தவறாமல் பேசுங்கள். “ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.”—ரோமர் 12:12.
கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை வாசியுங்கள். “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; . . . அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், . . . பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.”—2 தீமோத்தேயு 3:16, 17.
கடவுளைப் பற்றி மற்றவர்களுக்கு கற்பியுங்கள். “நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, . . . நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்.”—மத்தேயு 28:19, 20.
கடவுளுடைய நண்பர்களுடன் நெருங்கி பழகுங்கள். “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்.”—நீதிமொழிகள் 13:20.
ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் கூட்டங்களுக்குச் செல்லுங்கள். “அன்பு செலுத்தவும் நற்செயல்கள் புரியவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பக் கருத்தாயிருப்போமாக. . . . ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோமாக.”—எபிரேயர் 10:24, 25, பொ.மொ.
ராஜ்ய வேலையை ஆதரியுங்கள். “அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.”—2 கொரிந்தியர் 9:7.