உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ypq கேள்வி 5 பக். 15-17
  • ஸ்கூலில் யாராவது என்னை வம்புக்கு இழுத்தால் என்ன செய்யலாம்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஸ்கூலில் யாராவது என்னை வம்புக்கு இழுத்தால் என்ன செய்யலாம்?
  • இளைஞர்கள் கேட்கும் 10 கேள்விகளும் பதில்களும்
  • இதே தகவல்
  • சத்தாய்ப்பதில் என்ன தவறு?
    விழித்தெழு!—1997
  • என் பிள்ளைக்கு யாராவது தொல்லை கொடுத்தால் என்ன செய்வது?
    குடும்ப ஸ்பெஷல்
  • பள்ளியில் வீம்புக்காரர்களைக்குறித்து நான் என்ன செய்யக்கூடும்?
    விழித்தெழு!—1990
  • வம்பிழுக்கிறவர்களை சமாளிக்க யெகோவாவை நம்பியிருங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
மேலும் பார்க்க
இளைஞர்கள் கேட்கும் 10 கேள்விகளும் பதில்களும்
ypq கேள்வி 5 பக். 15-17
கூடப்படிக்கிற மாணவர்களுக்கு முன்னால் ஒரு பையனை ஒருவன் வம்புக்கு இழுக்கிறான்

கேள்வி 5

ஸ்கூலில் யாராவது என்னை வம்புக்கு இழுத்தால் என்ன செய்யலாம்?

ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?

நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து நிலைமை சரியாகலாம் அல்லது மோசமாகலாம்.

நீங்கள் என்ன செய்வீர்கள்?

இதைக் கற்பனை செய்து பாருங்கள்: தாமசுக்கு இன்று ஸ்கூலுக்கு போகவே பிடிக்கவில்லை. இன்று மட்டும் இல்லை, என்றுமே ஸ்கூலுக்கு போக பிடிக்கவில்லை. மூன்று மாதங்களுக்கு முன்னால், அவனோடு படிக்கும் மாணவர்கள் அவனைப் பற்றி மோசமான வதந்திகளைப் பரப்பினார்கள். பிறகு, பட்டப் பெயர் வைத்து அவனைக் கூப்பிட்டார்கள். சில சமயங்களில், அவனுடைய கையில் இருக்கும் புத்தகங்களை யாராவது தட்டிவிட்டு அது ஏதோ தெரியாமல் நடந்ததுபோல் செய்துவிடுவார்கள். அல்லது கூட்டத்தில் இருக்கும் ஒருவன் அவனைத் தள்ளிவிடுவான். தாமஸ் திரும்பிப் பார்க்கும்போது யார் அவனைத் தள்ளிவிட்டது என்று அவனால் கண்டுபிடிக்க முடியாது. நேற்று, நிலைமை இன்னும் மோசமாகியது. இன்டர்நெட்டில் அவனுக்கு ஒரு மிரட்டல் வந்தது...

நீங்கள் தாமசுடைய இடத்தில் இருந்தால் என்ன செய்வீர்கள்?

நன்றாக யோசியுங்கள்!

உங்களுக்கும் பலம் இருக்கிறது! ஆனால், வம்புக்கு இழுக்கிறவர்களை சண்டை போடாமலேயே உங்களால் சமாளிக்க முடியும். எப்படி?

  • அமைதியாக இருங்கள். “மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 29:11) நீங்கள் அமைதியாக இருந்தால், அல்லது பார்ப்பதற்காவது அமைதியாகத் தெரிந்தால், உங்களை வம்புக்கு இழுக்கிறவர்களுடைய ஆர்வம் குறையலாம்.

  • பழிக்குப் பழி வாங்காதீர்கள். “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதீர்கள்” என்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 12:17) பழிக்குப் பழி வாங்கினால் நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகும்.

  • பிரச்சினையில் மாட்டிக்கொள்ளாதீர்கள். “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 22:3) பிரச்சினை செய்கிறவர்களிடம் முடிந்தளவு எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளாதீர்கள். உங்களை வம்புக்கு இழுப்பது மாதிரியான சூழ்நிலைகளைத் தவிர்த்திடுங்கள்.

  • அவர்கள் எதிர்பார்க்காத ஒன்றைச் சொல்ல முயற்சி செய்யுங்கள். “மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 15:1) நீங்கள் ஏதாவது நகைச்சுவையாகச் சொல்ல முயற்சி செய்யலாம். உதாரணத்துக்கு, நீங்கள் ரொம்ப குண்டாக இருப்பதாக உங்களை வம்புக்கு இழுக்கிறவன் சொன்னால், “ஆமா, என்னோட எடைய கொஞ்சம் குறைக்கணும்னு நினைக்கிறேன்” என்று சாதாரணமாகச் சொல்லுங்கள்.

  • அங்கிருந்து போய்விடுங்கள். 19 வயது நோரா இப்படிச் சொல்கிறாள்: ‘அமைதியா இருக்குறது, நீங்க பக்குவமுள்ளவங்கனும் உங்கள வம்புக்கு இழுக்கிறவங்களவிட நீங்க பலசாலினும் காட்டும். வம்பு இழுக்கிறவனுக்கு இல்லாத சுய கட்டுப்பாடு உங்களுக்கு இருக்குன்னு காட்டும்.’—2 தீமோத்தேயு 2:24.

  • தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள். தங்களைப் பற்றி யார் குறைவாக நினைத்துக்கொள்கிறார்கள் என்றும், யார் பதிலுக்குச் சண்டை போட மாட்டார்கள் என்றும், வம்புக்கு இழுக்கிறவர்களால் சுலபமாகக் கண்டுபிடிக்க முடியும். ஆனால், உங்களை எதுவும் செய்ய முடியாது என்று தெரிந்துவிட்டால் அவர்களில் நிறைய பேர் உங்களைவிட்டு போய்விடுவார்கள்.

  • யாரிடமாவது சொல்லுங்கள். ஸ்கூல் டீச்சராக இருந்த ஒருவர் சொல்கிறார்: “‘உங்களை யாராவது வம்புக்கு இழுத்தா, என்கிட்ட வந்து சொல்லுங்க’னு சொல்வேன். அப்படி செய்றதுதான் சரியா இருக்கும். அப்போதான், அந்த பசங்க மத்த பசங்கள வம்புக்கு இழுக்காம பார்த்துக்க முடியும்.”

வம்புக்கு இழுக்கிறவனை ஒரு இளைஞன் தன்னம்பிக்கையோடு எதிர்ப்படுகிறான்

வம்புக்கு இழுக்கிறவனிடம் இல்லாத பலத்தை, தன்னம்பிக்கை உங்களுக்குக் கொடுக்கும்

உங்களுக்குத் தெரியுமா?

நேரடியாகத் தாக்கப்படுவதோடு, வம்பு இழுப்பதில் இருக்கும் இன்னும் சில விஷயங்கள்:

  • வம்புக்கு இழுக்கிறவனுடைய வாயிலிருந்து நெருப்பு போன்ற வார்த்தைகள் வருகின்றன

    வார்த்தையால் தாக்குவது. “அவங்க பயன்படுத்தின பட்டப்பெயர்களையோ சொன்ன விஷயங்களையோ என்னால மறக்கவே முடியாது. நான் எதுக்குமே லாயக்கில்ல, நான் யாருக்குமே தேவையில்ல, என்னால ஒரு பிரயோஜனமும் இல்லனு நினைக்கிற அளவுக்கு அவங்க நடந்துகிட்டாங்க. இப்படி செஞ்சதவிட என்னோட மான மரியாதையயே கெடுத்திருக்கலாம்.”—செலின், 20 வயது.

  • கூட இருப்பவர்களால் ஒதுக்கப்பட்ட ஒரு இளைஞன் தனியாக உட்கார்ந்திருக்கிறான்

    ஒதுக்கிவைப்பது. “என் கூட படிக்கிறவங்க என்னை ஒதுக்க ஆரம்பிச்சாங்க. சாப்பிடுற இடத்துல எனக்கு உட்கார இடமே இல்லாத மாதிரி பண்ணுவாங்க. அதனால, அவங்ககூட உட்கார்ந்து சாப்பிட முடியாது. ஒரு வருஷம் முழுதும் அழுதுகிட்டே இருந்தேன், தனியாதான் சாப்பிட்டேன்.”—ஹேலே, 18 வயது.

  • இன்டர்நெட் மூலம் வம்புக்கு இழுக்கப்பட்ட ஒரு இளம் பெண் கம்ப்யூட்டரிலிருந்து பின்னால் தள்ளி நிற்கிறாள்

    இன்டர்நெட்டில் வம்பு இழுப்பது. “கம்ப்யூட்டர்ல ரெண்டு மூணு வார்த்தை தட்டுனாலே போதும், ஒருத்தரோட பேரை, ஏன், அவங்க வாழ்க்கையையே கெடுத்திடலாம். ஒருவேளை, நான் மிகைப்படுத்தி சொல்ற மாதிரி தெரியலாம். ஆனா, உண்மையிலயே அப்படி நடக்க நிறைய வாய்ப்பு இருக்கு!”—டேனியல், 14 வயது.

வம்பு இழுப்பது சம்பந்தமான விஷயங்கள்

சரியா தவறா?

பதில்

1 வம்பு இழுப்பது, பல ஆயிரம் வருடங்களாக இருந்து வருகிறது.

1 சரி. உதாரணத்துக்கு, இராட்சதர்களைப் பற்றி பைபிள் சொல்கிறது. இராட்சதர்கள் என்பதற்கு, “மற்றவர்களை வீழ்த்துகிறவர்கள்” என்று அர்த்தம்.—ஆதியாகமம் 6:4.

2 இது வெறுமனே சீண்டுவதுதான். இதில் ஒன்றும் பெரிய தவறு இல்லை.

2 தவறு. நிறைய இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கு வம்பு இழுப்பதும் ஒரு காரணம்.

3 இவர்களைத் தடுத்து நிறுத்துவதற்கான சிறந்த வழி, திருப்பித் தாக்குவதுதான்.

3 தவறு. பெரும்பாலும், பாதிக்கப்படுகிறவர்களைவிட வம்பு இழுக்கிறவர்கள் பலசாலிகளாக இருப்பதால், திருப்பித் தாக்க முயற்சி செய்வதில் எந்தப் பிரயோஜனம் இல்லை.

4 யாராவது வம்பு இழுப்பதை நீங்கள் பார்த்தால், கண்டும்காணாமல் விட்டுவிடுவதுதான் நல்லது.

4 தவறு. இந்த விஷயத்தில், ‘நான் சும்மாதான் நின்னுகிட்டு இருக்கேன். எனக்கு எதுவும் தெரியாது’ என்று சொல்ல முடியாது. அவர்களைப் பார்த்துவிட்டு நீங்கள் பேசாமல் இருந்தால், பிரச்சினையைச் சரி செய்ய உதவ மாட்டீர்கள். அந்தப் பிரச்சினைக்கு நீங்களும் ஒரு காரணமாகிவிடுவீர்கள்.

5 இவர்கள் வீராப்பாகப் பேசினாலும் பாதுகாப்பு இல்லாதவர்களாக உணர்வார்கள்.

5 சரி. வம்பு இழுக்கும் சிலர், ‘நான்தான் எல்லாமே’ என்று நினைத்தாலும் பாதுகாப்பு இல்லாதவர்களாக உணர்வார்கள். அவர்கள் நன்றாக உணர வேண்டும் என்பதற்காக மற்றவர்களை மட்டம் தட்டுவார்கள்.

6 இவர்கள் மாறலாம்.

6 சரி. உதவி கிடைத்தால், அவர்கள் யோசிக்கிற விதத்தையும் நடந்துகொள்கிற விதத்தையும் அவர்களால் மாற்றிக்கொள்ள முடியும்.

என்ன செய்யலாம்?

  • என்னை யாராவது வம்பு இழுத்தால், நான் என்ன செய்வேன் அல்லது சொல்வேன்?

கூடுதலாக . . .

வம்புக்கு இழுக்கிறவனைச் சண்டை போடாமலேயே சமாளி

வம்பு பண்ணுகிற பசங்களை சமாளிப்பது எப்படி என்ற ஒயிட்போர்டு அனிமேஷனை www.jw.org-ல் பாருங்கள். (பைபிள் போதனைகள் > டீனேஜர்களுக்கு என்ற பகுதி)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்