உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • lfb பாடம் 27 பக். 68-பக். 69 பாரா. 2
  • யெகோவாவுக்கு எதிரான கலகம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவுக்கு எதிரான கலகம்
  • பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • இதே தகவல்
  • ஆரோனுடைய கோல் பூ பூக்கிறது
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
  • கடவுள் ஏற்படுத்தியிருக்கும் அதிகாரத்திற்கு உண்மையுடன் கீழ்ப்பட்டிருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • யெகோவா உங்களை அறிந்திருக்கிறாரா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • அகந்தைக்குப் பின் அவமானம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
மேலும் பார்க்க
பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
lfb பாடம் 27 பக். 68-பக். 69 பாரா. 2
கோராகுவும் அவருடைய ஆட்களும் மோசேக்கும் ஆரோனுக்கும் முன்னால் நிற்கிறார்கள்

பாடம் 27

யெகோவாவுக்கு எதிரான கலகம்

கொஞ்ச காலத்துக்குப் பிறகு, இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் இருந்த சமயத்தில் கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரும் இன்னும் 250 பேரும் மோசேக்கு எதிராகக் கலகம் செய்தார்கள். அவர்கள் மோசேயிடம், ‘உங்களால் நாங்கள் பட்ட கஷ்டமெல்லாம் போதும்! நீங்கள் ஏன் எங்களுக்குத் தலைவராக இருக்க வேண்டும்? ஆரோன் ஏன் எங்களுக்குத் தலைமைக் குருவாக இருக்க வேண்டும்? யெகோவா உங்களோடும் ஆரோனோடும் மட்டும்தான் இருக்கிறாரா? மக்கள் எல்லாரோடும்தான் இருக்கிறார்’ என்று சொன்னார்கள். அவர்கள் செய்தது யெகோவாவுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் தனக்கு எதிராகவே கலகம் செய்ததாக யெகோவா நினைத்தார்.

மோசே கோராகுவிடமும் அவரோடு வந்தவர்களிடமும், ‘நாளைக்கு வழிபாட்டுக் கூடாரத்துக்கு வாருங்கள். உங்களுடைய தூபக்கரண்டியில் தூபப்பொருளை நிரப்பிக் கொண்டுவாருங்கள். யெகோவா யாரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதை அவரே நமக்குக் காட்டுவார்’ என்று சொன்னார்.

அடுத்த நாள், கோராகுவும் 250 ஆட்களும் மோசேயைப் பார்ப்பதற்காக வழிபாட்டுக் கூடாரத்துக்குப் போனார்கள். குருமார்களைப் போல தூபத்தை எரித்தார்கள். அப்போது யெகோவா, ‘கோராகுவையும் அவனுடைய ஆட்களையும் விட்டு தள்ளிப் போங்கள்’ என்று மோசேயிடமும் ஆரோனிடமும் சொன்னார்.

வழிபாட்டுக் கூடாரத்துக்கு வரும்படி மோசே சொல்லியிருந்தும், தாத்தானும் அபிராமும் அவர்களுடைய குடும்பத்தாரும் வரவில்லை. யெகோவா இஸ்ரவேலர்களிடம், ‘கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோருடைய கூடாரங்களை விட்டு தள்ளிப் போங்கள்’ என்று சொன்னார். உடனே, இஸ்ரவேலர்கள் அங்கிருந்து தள்ளிப் போனார்கள். தாத்தானும் அபிராமும் அவர்களுடைய குடும்பத்தாரும் தங்கள் கூடாரத்துக்கு வெளியே நின்றார்கள். அப்போது, அவர்கள் நின்றுகொண்டிருந்த இடம் திடீரென்று இரண்டாகப் பிளந்தது. அவர்கள் எல்லாரும் அப்படியே பூமிக்குள் புதைந்துபோனார்கள். வழிபாட்டுக் கூடாரத்தில் நின்றுகொண்டிருந்த கோராகுவையும் 250 ஆட்களையும் வானத்திலிருந்து நெருப்பு வந்து எரித்துப்போட்டது.

பூமி பிளந்து தாத்தானையும் அபிராமையும் அவர்களுடைய குடும்பத்தாரையும் விழுங்குகிறது

பிறகு யெகோவா மோசேயிடம், ‘ஒவ்வொரு கோத்திரத்தின் தலைவரிடமிருந்தும் ஒரு கோலை வாங்கி, அவரவர் பெயரை அதில் எழுது. லேவி கோத்திரத்தின் கோலில் ஆரோனுடைய பெயரை எழுது. அவற்றை வழிபாட்டுக் கூடாரத்துக்குள் வை. நான் தேர்ந்தெடுக்கிறவனின் கோலில் பூ பூக்கும்’ என்று சொன்னார்.

அடுத்த நாள், மோசே அந்தக் கோல்களை வெளியே கொண்டுவந்து கோத்திரத் தலைவர்களிடம் காட்டினார். ஆரோனின் கோலில் பூ பூத்திருந்தது, வாதுமைப் பழங்களும் அதில் இருந்தன. இப்படி, ஆரோனைத் தலைமைக் குருவாகத் தான் தேர்ந்தெடுத்திருப்பதை யெகோவா தெளிவாகக் காட்டினார்.

‘உங்களை வழிநடத்துகிறவர்களுக்குக் கீழ்ப்படிந்து, அடிபணிந்து நடங்கள்.’—எபிரெயர் 13:17

கேள்விகள்: கோராகுவும் அவருடைய ஆட்களும் ஏன் மோசேக்கு எதிராகக் கலகம் செய்தார்கள்? யெகோவா ஆரோனைத் தலைமைக் குருவாகத் தேர்ந்தெடுத்தார் என்பது நமக்கு எப்படித் தெரியும்?

எண்ணாகமம் 16:1–17:13; 26:9-11; சங்கீதம் 106:16-18

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்