பகுதி 6—முன்னுரை
கடவுள் வாக்குக் கொடுத்த தேசத்துக்கு இஸ்ரவேலர்கள் வந்துசேர்ந்த பிறகு, வழிபாட்டுக் கூடாரம் கடவுளை வணங்குவதற்கான முக்கிய இடமாக ஆனது. குருமார்கள் திருச்சட்டத்தைக் கற்றுக்கொடுத்தார்கள், நியாயாதிபதிகள் மக்களை வழிநடத்தினார்கள். ஒருவருடைய தீர்மானங்களும் செயல்களும் மற்றவர்கள்மீது எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்வோம். இஸ்ரவேலர்கள் ஒவ்வொருவருமே யெகோவாவுக்கும் மற்றவர்களுக்கும் உண்மையாக இருக்க வேண்டியிருந்தது. தெபொராள், நகோமி, யோசுவா, அன்னாள், யெப்தாவின் மகள், சாமுவேல் ஆகியோர் மற்றவர்களுக்கு நல்ல முன்மாதிரியாக இருந்தார்கள். கடவுள் இஸ்ரவேலர்களுக்குத் துணையாக இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டதால், ராகாப், ரூத், யாகேல், கிபியோனியர்கள் போன்ற வேறு தேசத்து மக்களும் இஸ்ரவேலர்களின் பக்கம் சேர்ந்துகொண்டார்கள் என்பதை எடுத்துச் சொல்லுங்கள்.