கேள்விப் பெட்டி
◼ சபை புத்தகப் படிப்புகள் எப்போது நடத்தப்பட வேண்டும்?
எல்லாரும் ராஜ்ய மன்றத்தில் கூடும்படி செய்வதைப் பார்க்கிலும், புத்தகப் படிப்பு தொகுதிகள் பல, சபையின் பிராந்தியம் முழுவதிலும் சிதறியிருக்கும்படியாகப் பற்பல இடங்களில் கூடும்படி செய்வது பொதுவாய் அதிக நடைமுறைக்குரியதாகவும் வசதியாகவும் உள்ளது. ஒவ்வொரு புத்தகப் படிப்பு தொகுதியிலும் கூடும்படி நியமிக்கப்பட்டவர்கள் பெரும்பான்மையருக்கு மிக வசதியாயிருக்கும் நேரத்தில் இந்தப் படிப்புகள் நடத்தப்பட வேண்டும். பொதுவாக இது, வாரத்தினூடே வேறு எந்தக் கூட்டங்களோ ஊழிய நடவடிக்கைகளோ ஏற்பாடுசெய்யப்படாத ஒரு சாயங்காலத்தின்போது நடத்தப்படுகிறது. எனினும், இருட்டிய பின்பு வெளியில் செல்வதைப்பற்றித் தயக்கங்கொள்ளும் முதியோருக்கும் இரவு வேலைசெய்வோருக்கும் வசதியாயிருக்கும்படி பகலில் நடத்துவதற்கு ஏற்பாடுசெய்வது அனுகூலமாயிருக்கலாம். ஒருசில தொகுதிகளில் பகல்நேர படிப்பை வார முடிவில் வைப்பது நடைமுறைக்குகந்ததாக இருக்கலாம்.
அக்கறைகாட்டுவோர் உட்பட ‘பிரஸ்தாபிகள் பெரும்பான்மையருக்கு வசதியாயிருக்கும்’ கூட்ட நேரங்களைத் தீர்மானிப்பதற்கு மூப்பர்கள் பொருத்தமான தகவல் விசாரிப்பு செய்யலாம். (om பக். 62) தெரிந்தெடுக்கப்படும் இந்த நேரம் திட்டமிடப்பட்ட வெளி ஊழியத்துக்கு இடையூறாகவோ அல்லது அதை மட்டுப்படுத்துவதாகவோ இராத நாளும் மணிநேரமுமாக இருக்கவேண்டும்.