நினைவு ஆசரிப்பு நினைப்பூட்டுதல்கள்
இந்த வருட நினைவு ஆசரிப்பு மார்ச் 24, வியாழக்கிழமை அன்று அனுசரிக்கப்படும். பின்வரும் காரியங்களுக்கு மூப்பர்கள் கவனம் செலுத்த வேண்டும்:
◼ கூட்டத்திற்கான நேரத்தை நிர்ணயிக்கையில், சூரிய அஸ்தமனத்திற்கு பிறகே சின்னங்கள் பரிமாறப்படும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
◼ ஆசரிப்பு நடைபெறும் சரியான நேரத்தையும் இடத்தையும் பேச்சாளர் உட்பட எல்லாருக்கும் தெரிவிக்க வேண்டும்.
◼ தகுந்த அப்பத்தையும் திராட்ச ரசத்தையும் தயாராய் வைக்க வேண்டும்.—பிப்ரவரி 15, 2003, காவற்கோபுரம், பக். 14-15-ஐக் காண்க.
◼ பிளேட்டுகள், ஒயின் கப்புகள், பொருத்தமான டேபிள், டேபிள் கிளாத் ஆகியவற்றை முன்னதாகவே கொண்டுவந்து அவற்றிற்குரிய இடத்தில் வைக்க வேண்டும்.
◼ ராஜ்ய மன்றத்தை அல்லது கூட்டம் நடத்தும் இடத்தை முன்னதாகவே நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
◼ அட்டண்டன்ட்டுகளையும் பரிமாறுபவர்களையும் தேர்ந்தெடுத்து, அவரவருடைய பொறுப்புகளையும் அதைச் செய்ய வேண்டிய சரியான முறையையும் மரியாதைக்குரிய உடை மற்றும் தோற்றத்தின் அவசியத்தையும் பற்றி அவர்களுக்கு ஆலோசனை கொடுக்க வேண்டும்.
◼ அபிஷேகம் செய்யப்பட்டவர்களில் யாராவது வியாதியாக அல்லது ஆஜராக முடியாமல் இருந்தால் அவருக்கும் சின்னங்களைப் பரிமாற ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
◼ ஒரே ராஜ்ய மன்றத்தை ஒன்றுக்கு மேற்பட்ட சபைகள் உபயோகிக்க திட்டமிட்டிருந்தால் அவை ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம். அப்போதுதான் வராண்டாவிலோ, நுழைவாயிலிலோ, நடைபாதையிலோ, வாகனங்கள் நிறுத்துமிடங்களிலோ தேவையில்லாமல் நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.