கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
வறட்சிக் காலத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
விசுவாசத்துக்கும் நம்பிக்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. உதாரணத்துக்கு, யெகோவாமேல் பலமான விசுவாசம் இருந்தால், அவர் நம்மைக் காப்பாற்றுவார் என்று உறுதியாக நம்புவோம். (சங் 23:1, 4; 78:22) இந்த உலகத்தின் முடிவு நெருங்க நெருங்க, சாத்தானின் தாக்குதல்கள் அதிகமாகும் என்று நாம் எதிர்பார்க்கலாம். (வெளி 12:12) அவனுடைய தாக்குதல்களைச் சமாளிக்க எது நமக்கு உதவும்?
வறட்சிக் காலத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
நாம் எப்படி எரேமியா 17:8-ல் சொல்லப்பட்டுள்ள “மரத்தை” போல இருக்கிறோம்?
‘உஷ்ணத்தின்’ ஒரு வகை என்ன?
‘மரங்களுக்கு’ என்ன ஆகும், ஏன்?
சாத்தான் எதை அழிக்கப் பார்க்கிறான்?
நாம் எப்படி அனுபவமுள்ள விமானப் பயணிகளைப் போல இருக்கிறோம்?
உண்மையும் விவேகமும் உள்ள அடிமைமேல் நாம் ஏன் தொடர்ந்து நம்பிக்கை வைக்க வேண்டும், நம் நம்பிக்கைக்கு எப்படிப்பட்ட சோதனைகள் வரும்?
உலக மக்கள் நம்மைக் கேலி செய்தாலும் நாம் ஏன் பைபிள் நியமங்களைத் தொடர்ந்து நம்ப வேண்டும்?