கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
குடும்பத்தில் அன்பு காட்டுங்கள்
குடும்பத்தாரை ஒன்றிணைக்கிற பசைதான் அன்பு! குடும்பத்தில் அன்பு இல்லையென்றால், ஒற்றுமையாக இருப்பதும், ஒருவருக்கொருவர் உதவி செய்வதும் கஷ்டமாகிவிடும். ஒரு கணவராக, மனைவியாக, பெற்றோராக குடும்பத்தில் நீங்கள் எப்படி அன்பு காட்டலாம்?
அன்பான கணவன், தன்னுடைய மனைவியின் தேவைகளையும், கருத்துகளையும், உணர்ச்சிகளையும் புரிந்துகொள்வார். (எபே 5:28, 29) குடும்பத்தாருடைய அன்றாடத் தேவைகளைக் கவனித்துக்கொள்வார். யெகோவாவோடு அவர்கள் நல்ல பந்தத்தை வைத்துக்கொள்வதற்குத் தேவையான எல்லாவற்றையும் செய்வார். தவறாமல் குடும்ப வழிபாட்டை நடத்துவதும் அதில் ஒன்று. (1தீ 5:8) அன்பான மனைவி, தன்னுடைய கணவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பாள், அவருக்கு “ஆழ்ந்த மரியாதை” காட்டுவாள். (எபே 5:22, 33; 1பே 3:1-6) கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் தாராளமாக மன்னிக்க மனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். (எபே 4:32) அன்பான பெற்றோர்கள், பிள்ளைகள் ஒவ்வொருவர்மீதும் அக்கறை காட்டுவார்கள், யெகோவாமேல் அன்பு காட்ட அவர்களுக்கு சொல்லித்தருவார்கள். (உபா 6:6, 7; எபே 6:4) ‘ஸ்கூலில் பிள்ளைகளுக்கு என்னென்ன பிரச்சினைகள் வருகின்றன? கூடப்படிக்கிற பிள்ளைகளிடமிருந்து வருகிற தொல்லைகளை அவர்கள் எப்படிச் சமாளிக்கிறார்கள்?’ என்பதையெல்லாம் அக்கறையுள்ள பெற்றோர் கவனிக்கிறார்கள். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் அன்பு காட்டும்போது எல்லாருமே பாதுகாப்பாக உணருவார்கள்.
ஒழிந்துபோகாத அன்பை உங்கள் குடும்பத்தில் காட்டுங்கள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
அன்பான ஒரு கணவன் தன்னுடைய மனைவியை எப்படிக் கவனித்துக்கொண்டு நெஞ்சார நேசிக்கிறார்?
அன்பான ஒரு மனைவி தன்னுடைய கணவனுக்கு எப்படி ஆழ்ந்த மரியாதை காட்டுகிறாள்?
அன்பான பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளின் மனதில் கடவுளுடைய வார்த்தையை எப்படிப் பதிய வைக்கிறார்கள்?