2 யாக்கோபின் வரலாறு இதுதான்.
அவருடைய மகன் யோசேப்பு,+ 17 வயதாக இருந்தபோது பில்காளின் மகன்களோடும் சில்பாளின் மகன்களோடும் சேர்ந்து ஆடுகளை மேய்த்துவந்தான்.+ பில்காளும் சில்பாளும் யாக்கோபின் மனைவிகள். அவர்களுடைய மகன்கள்+ செய்த தவறுகளைப் பற்றி யோசேப்பு ஒருமுறை தன்னுடைய அப்பாவிடம் சொன்னான்.