12 கொஞ்சக் காலம் கழித்து, சூவாவின்+ மகளான யூதாவின் மனைவி இறந்துபோனாள். யூதா அவளுக்காகத் துக்கம் அனுசரித்தார். பின்பு, தன்னுடைய ஆடுகளுக்கு மயிர் கத்தரிப்பதற்காக அதுல்லாம் ஊரைச்+ சேர்ந்த தன்னுடைய நண்பர் ஹிராவைக் கூட்டிக்கொண்டு திம்னாவுக்குப்+ புறப்பட்டுப் போனார்.