17 அப்போது, நான் இறங்கி வந்து+ உன்னோடு பேசுவேன்.+ நான் உனக்குக் கொடுத்திருக்கிற சக்தியில்+ கொஞ்சத்தை எடுத்து அவர்கள்மேல் வைப்பேன். ஜனங்களைக் கவனித்துக்கொள்ள அவர்கள் உனக்கு உதவியாக இருப்பார்கள். ஜனங்கள் எல்லாரையும் இனி நீ தனியாகச் சமாளிக்க வேண்டியதில்லை.+