4 இப்படி ஒவ்வொரு நாளும் அவர்கள் கேட்டுக்கொண்டே இருந்தார்கள், ஆனால் மொர்தெகாய் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. அதனால் அவர்கள் ஆமானிடம், “மொர்தெகாய் செய்வது சரிதானா என்று நீங்களே பாருங்கள்” என்றார்கள்.+ தான் ஒரு யூதன்+ என்று மொர்தெகாய் அவர்களிடம் சொல்லியிருந்தார்.