4 சூரியனுக்குக் கீழே நடக்கிற எல்லா கொடுமைகளையும் நான் மறுபடியும் கவனித்தேன். அடக்கி ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைப் பார்த்தேன்; அவர்களுக்கு ஆறுதல் சொல்ல யாருமே இல்லை.+ அவர்களை அடக்கி ஒடுக்கியவர்களுக்கு அதிகாரம் இருந்ததால் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல யாருமே இல்லை.