32 பிறகு, எரேமியா இன்னொரு சுருளை எடுத்து நேரியாவின் மகனும், செயலாளருமான பாருக்கிடம் கொடுத்தார்.+ யூதாவின் ராஜா யோயாக்கீம் எரித்த சுருளில்+ இருந்த எல்லா வார்த்தைகளையும் எரேமியா சொல்லச் சொல்ல பாருக் எழுதினார். அதுபோன்ற இன்னும் பல வார்த்தைகளும் சேர்க்கப்பட்டன.