அடிக்குறிப்பு
a துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை அநேக பிள்ளைகள் வாய் திறந்து சொல்லாவிட்டாலும், அவர்கள் நடந்துகொள்ளும் விதமே ‘ஏதோ பிரச்சினை இருக்கிறது’ எனக் காட்டிக்கொடுத்துவிடுமென வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். உதாரணமாக, குழந்தையாயிருக்கையில் ஒரு பிள்ளை படுக்கையில் சிறுநீர் கழித்திருக்கலாம், எப்போதும் பெற்றோருடன் ஒட்டிக்கொண்டே இருந்திருக்கலாம், தனியாக இருப்பதற்குப் பயந்திருக்கலாம். கொஞ்சம் வளர்ந்தபிறகு, இதையெல்லாம் நிறுத்தியிருக்கலாம். ஆனால், திடீரென மீண்டும் அப்படி நடந்துகொள்ள ஆரம்பித்தால், ஏதோவொரு முக்கிய பிரச்சினை அவனுக்கு இருப்பதை அவன் சொல்லாமல் சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம். இப்படிப்பட்ட அறிகுறிகளை, அந்தப் பிள்ளை துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பதற்கான சான்றாக எப்போதும் எடுத்துக்கொள்ள முடியாது. அவனுக்கு என்ன பிரச்சினை என்பதை நிதானமாக, அவனோடு பேசிப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். இதன்மூலம், அவனுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் பாதுகாப்பையும் அளியுங்கள்.