அடிக்குறிப்பு
a சிலர் வேறொரு காரணத்தைக் கூறுகின்றனர்: அந்த யூதர்கள் கிரேக்கத் தத்துவவியலால் செல்வாக்குச் செலுத்தப்பட்டிருக்கலாம். உதாரணமாக, அலெக்ஸாந்திரியாவைச் சேர்ந்தவனும் இயேசுவோடு ஏறக்குறைய இயேசுவின் காலத்தில் வாழ்ந்தவனுமாயிருந்த ஒரு யூதத் தத்துவஞானியாகிய ஃபிலோ, கிரேக்கத் தத்துவஞானி பிளேட்டோவால் வெகுவாய்ச் செல்வாக்குச் செலுத்தப்பட்டிருந்தான், அவனைக் கடவுளால் ஏவப்பட்டவனென எண்ணினான். Lexikon des Judentums (யூத மதத்தின் அகராதி) “ஃபிலோ” என்பதன்கீழ் சொல்வதாவது, ஃபிலோ “(பிளேட்டோவின்) கிரேக்கத் தத்துவவியலின் மொழிநடையையும் எண்ணங்களையும் யூதரின் வெளிப்படுத்தப்பட்ட விசுவாசத்தோடு ஒன்றிணைத்தான்,” இது தொடக்கமாக “கிறிஸ்தவ சர்ச் பிரமுகர்களின்மீது காணக்கூடிய பாதிப்பைக் கொண்டிருந்தது.” கடவுளை விவரித்துக் கூறமுடியாது, ஆகவே பெயரிட்டுக் கூறமுடியாதவர் என்று ஃபிலோ கற்பித்தான்.