அடிக்குறிப்பு
a ‘யெகோவாவின் கிளை’ என்ற பதம், எருசலேம் புதுப்பிக்கப்பட்ட பிறகு தோன்றவிருக்கும் மேசியாவை குறிப்பதாக சில அறிஞர்கள் சொல்கின்றனர். அராமிக் டார்கம்ஸ், இப்பதத்தை “யெகோவாவின் மேசியா [கிறிஸ்து]” என மொழிபெயர்க்கிறது. மேலும், தாவீதுக்கு ‘ஒரு நீதியுள்ள கிளை’ எழும்புமென பிற்பாடு எரேமியா குறிப்பிடுகையில் அதே எபிரெய பெயர்ச்சொல்லை (ஸேமேக் [tseˈmach]) பயன்படுத்தியது ஆர்வத்திற்குரியது.—எரேமியா 23:5; 33:15.