அடிக்குறிப்பு
c பாபிலோனின் வீழ்ச்சி பற்றிய ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவ்வளவு துல்லியமாக இருப்பதால், அந்த வீழ்ச்சிக்குப் பிறகே அது எழுதப்பட்டிருக்க வேண்டுமென பைபிள் விமர்சகர்கள் சிலர் கூறுகின்றனர். ஆனால், பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு நடக்கப்போகும் சம்பவங்களை பரிசுத்த ஆவியால் ஏவப்பட்ட ஒரு தீர்க்கதரிசி முன்னறிவிக்க முடியும் என நாம் ஏற்றுக்கொண்டோமானால், இப்படிப்பட்ட ஊகங்களுக்கே இடமில்லை என எபிரெய மொழி நிபுணர் எஃப். டீலிட்ஷ் குறிப்பிடுகிறார்.