அடிக்குறிப்பு
a “எல்லாம் புதுப்பிக்கப்படுகிற காலங்கள்,” மேசியானிய ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டபோது ஆரம்பித்தது; அப்போது உண்மையுள்ள தாவீது ராஜாவின் வாரிசானவர் சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டார். தாவீதின் சந்ததியில் வருபவர் என்றென்றும் ஆளுகை செய்வார் என யெகோவா அவரிடம் வாக்குறுதி அளித்திருந்தார். (சங்கீதம் 89:35-37) ஆனால் கி.மு. 607-ல் எருசலேமை பாபிலோன் அழித்த பிறகு தாவீதின் சந்ததியில் வந்த எந்த மனிதரும் கடவுளுடைய சிங்காசனத்தில் அமரவில்லை. தாவீதின் வம்சத்தாராக பூமியில் பிறந்த இயேசு, பரலோக சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டபோது, வெகுகாலத்திற்கு முன்பு வாக்குறுதி அளிக்கப்பட்ட அந்த ராஜாவானார்.