அடிக்குறிப்பு
a ரபீக்களின் சட்டப்படி, ஒருவரும் தொழுநோயாளியின் பக்கத்தில் நான்கு முழ தூரத்திற்கு (சுமார் ஆறு அடிக்கு) வரக் கூடாது. அதுவும் காற்றடித்தால், அந்த நோயாளி குறைந்தபட்சம் 100 முழ தூரம் (சுமார் 150 அடி) தள்ளி நிற்க வேண்டும். தொழுநோயாளிகளிடமிருந்து ஒரு ரபீ ஒளிந்து கொண்டதாகவும், மற்றொரு ரபீ அவர்களை தூரப் போகும்படி செய்வதற்கு கற்களை வீசி எறிந்ததாகவும் மிட்ராஷ் ரப்பா கூறுகிறது. இவ்வாறு, இழிவானவர்களாகவும் வேண்டாதவர்களாகவும் கருதப்பட்டு, ஒதுக்கப்படும் வேதனையை தொழுநோயாளிகள் அனுபவித்தனர்.