அடிக்குறிப்பு
a உதாரணமாக, ஒரு யூதனான இயேசு ஏன் சமாரியப் பெண்ணான தன்னிடம் பேசுகிறார் என்று அவள் கேட்டபோது அந்த இரு தேசத்தவருக்கும் காலங்காலமாக இருந்துவரும் பகையைச் சுட்டிக்காட்டுகிறாள். (யோவான் 4:9) அவளுடைய தேசத்தார் யாக்கோபின் வம்சத்திலிருந்து வந்தவர்கள் என்றும் கூறுகிறாள்—இது அன்றைய யூதர்கள் ஒத்துக்கொள்ளாத ஒரு விஷயம். (யோவான் 4:12) சமாரியர்கள் அந்நிய தேசத்தாரிலிருந்து தோன்றியவர்கள் என்பதை வலியுறுத்திக் காட்டுவதற்காக அவர்களை கியூத்தையர்கள் என்று யூதர்கள் அழைத்தார்கள்.