அடிக்குறிப்பு
a அந்த எதிரிகளில் சிலர், “விடுதலை பெற்றவர்களின் ஜெபக்கூடம்” என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஒருகாலத்தில் ரோமர்களால் சிறைபிடிக்கப்பட்டு, பிறகு விடுதலை செய்யப்பட்ட யூதர்களாய் இருந்திருக்கலாம்; அல்லது, யூத மதத்துக்கு மாறிய இவர்கள் ஒருகாலத்தில் அடிமைகளாக இருந்து பிறகு விடுதலை செய்யப்பட்டவர்களாக இருந்திருக்கலாம். தர்சு பட்டணத்து சவுலைப் போல அவர்களில் சிலர் சிலிசியாவிலிருந்து வந்தவர்கள். ஆனால், ஸ்தேவானிடம் விவாதம் செய்து தோற்றுப்போன அந்த சிலிசியா மக்கள் மத்தியில் சவுல் இருந்தார் என்று பதிவு சொல்வதில்லை.