அடிக்குறிப்பு
c அரியோபாகு என்பது அக்ரோபோலிஸின் வடமேற்கு பகுதியில் இருந்த ஒரு குன்று. பொதுவாக அங்குதான் அத்தேனே நகரத்தின் உச்ச நீதிமன்றம் கூடியது. அதனால், “அரியோபாகு” என்ற வார்த்தை அந்த நீதிமன்றத்தையும் குறிக்கலாம், அந்தக் குன்றையும் குறிக்கலாம். இதனால்தான், பவுல் உண்மையில் எங்கே அழைத்துச் செல்லப்பட்டார் என்பதன் பேரில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு இருக்கிறது; அவர் அந்தக் குன்றுக்கோ அதற்குப் பக்கத்திலோ அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள்; இன்னும் சிலர், அவர் உச்ச நீதிமன்ற விசாரணைக்காக வேறொரு இடத்துக்கு, ஒருவேளை சந்தைக்கு, அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள்.