அடிக்குறிப்பு
b அந்தக் கூடாரம் பெரியதாக இருந்தது, செவ்வக வடிவத்தில் இருந்தது, விலையுயர்ந்த மரச் சட்டங்களால் அமைக்கப்பட்டிருந்தது. அந்தச் சட்டங்கள்மீது தங்கத் தகடுகள் அல்லது வெள்ளித் தகடுகள் அடிக்கப்பட்டிருந்தன. அந்தக் கூடாரம் உயர் ரக விரிப்புகளால் மூடப்பட்டிருந்தது; அதாவது, கடல்நாய்த் தோல் விரிப்புகளாலும் பூத்தையல் போட்ட அழகிய விரிப்புகளாலும் மூடப்பட்டிருந்தது. அந்தக் கூடாரத்தைச் சுற்றிலும் செவ்வக வடிவில் பிரகாரம் அமைக்கப்பட்டிருந்தது; பலிகள் செலுத்த அங்கு ஒரு பலிபீடமும் வைக்கப்பட்டிருந்தது. பிற்காலத்தில், குருமார்களுக்காகக் கூடாரத்தின் இரண்டு பக்கங்களிலும் அறைகள் அமைக்கப்பட்டன; அப்படிப்பட்ட ஓர் அறையில்தான் சாமுவேல் படுத்துத் தூங்கியிருப்பான் எனத் தெரிகிறது.