அடிக்குறிப்பு
c ஆரம்பக் காலத்தில் கொடுக்கப்பட்ட இதுபோன்ற எச்சரிப்புகள் கிறிஸ்துவின் சிறு மந்தையாகிய 1,44,000 பேருக்கு மட்டும்தான் பொருந்தியதாகச் சொல்லப்பட்டது. அதனால், அந்த எச்சரிப்புகள் பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. வெளிப்படுத்துதல் 7:9, 10-ல் சொல்லப்பட்ட “திரள் கூட்டமான மக்கள்” கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளைச் சேர்ந்த ஏராளமான ஆட்களைக் குறித்ததாக 1935-க்கு முன்பு நம்பப்பட்டது; அந்த ஆட்கள் முடிவு வருவதற்கு முன் கிறிஸ்துவுக்கு ஆதரவு தருவார்கள் என்றும், அதனால் பரலோக நம்பிக்கையுள்ள இரண்டாவது வகுப்பாராக இருப்பார்கள் என்றும் நம்பப்பட்டது. இதைப் பற்றி இந்தப் புத்தகத்தின் 5-ஆம் அதிகாரத்தில் விவரமாகப் பார்ப்போம்.