அடிக்குறிப்பு
c இயேசுவுக்கு வந்த சோதனைகளைப் பற்றி லூக்காவும் மத்தேயுவும் வெவ்வேறு வரிசையில் எழுதியிருக்கிறார்கள். மத்தேயு, அவற்றைக் கால வரிசைப்படி எழுதியிருப்பதாகத் தெரிகிறது. அதற்கான மூன்று காரணங்களைக் கவனியுங்கள். (1) இரண்டாவது சோதனையை, “பின்பு” என்ற வார்த்தைகளோடு மத்தேயு ஆரம்பிக்கிறார். இதிலிருந்து அவர் கால வரிசைப்படி எழுதியிருக்கிறார் என்பது தெரிகிறது. (2) மறைமுகமான முதல் இரண்டு சோதனைகளுக்குப் பிறகுதான் இயேசுவை சாத்தான் நேரடியாகச் சோதித்திருக்க வேண்டும். முதல் இரண்டு முறையும், “நீ கடவுளுடைய மகனாக இருந்தால்” என்று சொல்லி மறைமுகமாக இயேசுவைச் சோதித்தான். ஆனால், மூன்றாவது முறை, பத்துக் கட்டளைகளில் முதல் கட்டளையை மீறும்படி நேரடியாகச் சோதித்தான். (யாத். 20:2, 3) (3) “அப்பாலே போ சாத்தானே!” என்ற வார்த்தைகளைக் கடைசி முறை, அதாவது மூன்றாவது முறை, சோதிக்கப்பட்ட பிறகுதான் இயேசு சொல்லியிருக்க வேண்டும்.—மத். 4:5, 10, 11.