அடிக்குறிப்பு
a விருத்தசேதனம் பற்றிய காரியத்தில் பவுல் பிரதிபலித்த இரண்டு விதங்களையும் ஒப்பிடுங்கள். “விருத்தசேதனமும் ஒன்றுமில்லை” என்று அவர் அறிந்திருந்த போதிலும், தாய் வழியில் யூதனாகிய தன் பிரயாணத் தோழன் தீமோத்தேயுவை அவர் விருத்தசேதனம் செய்கிறார். (1 கொரிந்தியர் 7:19; அப்போஸ்தலர் 16:3) தீத்துவின் காரியத்தில், யூதேய மார்க்கத்தைப் புகுத்த முயற்சிப்பவர்களுடன் கொண்ட போராட்டத்தில் கொள்கை அடிப்படையில், அப்போஸ்தலனாகிய பவுல், அவர் விருத்தசேதனம் செய்யப்படுவதை தவிர்த்தார். (கலாத்தியர் 2:3) தீத்து ஒரு கிரேக்கன், எனவே, தீமோத்தேயுவைப் போல் அல்லாமல், விருத்தசேதனம் செய்யப்பட நியாயமான காரணம் அற்றவராயிருந்தார். ஒரு புறஜாதியாராகிய அவர் விருத்தசேதனம் செய்யப்பட வேண்டுமென்றால், ‘கிறிஸ்துவினால் அவருக்கு ஒரு பிரயோஜனமுமிராது.’—கலாத்தியர் 5:2-4.