அடிக்குறிப்பு
a எனினும், மன்னிப்பு அளிப்பதாவென்பதைத் தீர்மானிக்கையில் மற்ற உண்மைகளையும் யெகோவா நிச்சயமாகவே கவனிக்கிறார். உதாரணமாக, தவறு செய்தவன் கடவுளுடைய தராதரங்களைப்பற்றி அறியாதிருந்தால், அத்தகைய அறியாமை குற்றப்பழியின் பாரத்தைக் குறைக்கலாம். தம்மைக் கொல்வோரை மன்னிக்கும்படி இயேசு தம்முடைய பிதாவைக் கேட்டபோது, இயேசு, தம்மைக் கொன்ற ரோமப் போர்ச் சேவகருக்காகப் பேசினதாய்த் தெரிகிறது. அவர் உண்மையில் யார் என்று அவர்கள் அறியாதிருந்ததால் ‘தாங்கள் செய்தது இன்னதென்று அறியாதிருந்தார்கள்.’ எனினும், அந்தக் கொலை செய்யப்படுவதற்குக் காரணராக இருந்த மதத் தலைவர்களே மேலும் அதிகமான குற்றப்பழியை உடையோராக இருந்தனர்—அவர்களில் பலருக்கு மன்னிப்பு கூடியதாயில்லை.—யோவான் 11:45-53; அப்போஸ்தலர் 17:30-ஐ ஒத்துப்பாருங்கள்.