அடிக்குறிப்பு
a சி. டி. ரஸல் மரித்தபின், வேதாகமங்களில் படிப்புகள் என்ற புத்தகத்தின் ஏழாவது தொகுப்பு தயாரிக்கப்பட்டது. எசேக்கியேல், வெளிப்படுத்துதல் புத்தகங்களுக்கு விளக்கம் கொடுக்கும் முயற்சி அதில் மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பைபிள் புத்தகங்களைப் பற்றி ரஸல் கொடுத்திருந்த விளக்கங்களின் அடிப்படையில் அந்தத் தொகுப்பின் சில பாகங்கள் இருந்தன. என்றாலும், அந்த தீர்க்கதரிசனங்களின் அர்த்தத்தை வெளிப்படுத்தும் நேரம் அப்போது வரவில்லை. பொதுவாக சொல்லப்போனால், வேதாகமங்களில் படிப்புகள் தொகுப்பில் கொடுக்கப்பட்டிருந்த விளக்கங்கள் தெளிவாக இல்லாமல் மங்கலாகவே இருந்தன. தொடர்ந்து வந்த வருடங்களில், யெகோவாவின் தகுதியற்ற தயவும் உலக அரங்கில் தோன்றிய முன்னேற்றங்களும் இந்த தீர்க்கதரிசன புத்தகங்களின் அர்த்தத்தை மிகத் துல்லியமாக புரிந்துகொள்ள உதவியது.