அடிக்குறிப்பு
a மிகுந்த கவனமாக உருவாக்கப்பட்ட மூன்று முழ உயரமுள்ள கல் சுவர், புறதேசத்தாருக்கு ஒதுக்கப்பட்ட பிரகாரத்தை உட்பிரகாரத்திலிருந்து பிரித்தது. இந்தச் சுவரில் சீரான இடைவெளிகளில் கிரேக்க மொழியிலும் லத்தீன் மொழியிலும் எச்சரிக்கை வாசகங்கள் சில காணப்பட்டன: “இந்தத் தடுப்பு சுவரையும் பரிசுத்த ஸ்தலத்தைச் சுற்றியுள்ள சுவரையும் தாண்டி அந்நியர் எவரும் உள்ளே பிரவேசிக்காமல் இருப்பார்களாக. மீறி பிரவேசிப்பவர்கள் பிடிபட்டால் அவரே தன் மரணத்தைத் தேடிக்கொள்பவராக இருப்பார்.”