அடிக்குறிப்பு
a நன்றியுணர்வும் மனத்தாழ்மையுமே உருவான மேவிபோசேத் அப்படிப்பட்ட ஒரு பேராசைமிக்க சதித் திட்டத்தை தீட்டியிருக்கவே முடியாது. தன் தகப்பனாகிய யோனத்தான் எவ்வாறு உண்மையுள்ளவராக வாழ்ந்தார் என்பதை அவன் நன்றாகவே அறிந்திருப்பான். அரசனாகிய சவுலின் குமாரனாக யோனத்தான் இருந்தபோதிலும், இஸ்ரவேலின்மீது அரசனாக இருக்கும்படி யெகோவாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தாவீதே என மனத்தாழ்மையுடன் ஒப்புக்கொண்டார். (1 சாமுவேல் 20:12-17) மேவிபோசேத்தின் தேவபயமுள்ள தகப்பனாகவும் தாவீதின் உண்மைப் பற்றுறுதியுள்ள நண்பனாகவும் இருந்த யோனத்தான், அரசதிகாரத்தை ஆர்வத்துடன் நாடும்படி தன் இளம் குமாரனுக்குக் கற்பித்திருக்க மாட்டார்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• நாம் எதிர்ப்படும் பிரச்சினைகளை ஏன் மாம்சத்திலுள்ள முட்களுக்கு ஒப்பிடலாம்?
• மேவிபோசேத்தும் நெகேமியாவும் சகிக்க வேண்டியதாயிருந்த முட்கள் சில யாவை?
• மாம்சத்தில் பல்வேறு முட்களைச் சகித்த பலருடைய வேதப்பூர்வ உதாரணங்களில் எது உங்கள் நெஞ்சை மிகவும் நெகிழ வைக்கிறது, ஏன்?