அடிக்குறிப்பு
a இந்தப் பயணத்தின் அசௌகரியங்களைப் பற்றி இதே வழியில் பயணம் செய்த ரோம கவிஞர் ஹாரஸ் (பொ.ச.மு. 65-8) குறிப்பிட்டார். அப்பியு சந்தையைப் பற்றி ஹாரஸ் வர்ணித்தபோது, “படகோட்டிகளும் கஞ்சத்தனமான சத்திரக்காரர்களும் நிறைந்த நெரிசல்மிக்க இடம்” என்றார். அதோடு, “தொல்லைமிக்க கொசுக்களையும் தவளைகளையும்” பற்றியும் “சகிக்க முடியாத” தண்ணீரைப் பற்றியும் முறையிட்டார்.