அடிக்குறிப்பு
a இயேசு கற்பித்த பரமண்டல ஜெபத்தைப் போலவே, துக்கத்தில் இருப்போரின் காதீஷிலும் கடவுளுடைய பெயர் பரிசுத்தப்படுத்தப்பட வேண்டும் என்ற மன்றாட்டு இடம் பெற்றிருக்கிறது. இந்தக் காதீஷ் கிறிஸ்துவின் காலத்திற்குரியதா, அல்லது அதற்கும் முந்தைய காலத்திற்குரியதா என்பது விவாதத்தில் உள்ளது. இதற்கும் பரமண்டல ஜெபத்திற்கும் இடையிலிருக்கும் ஒற்றுமைகளைக் கண்டு நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. புதிய ஜெபத்தைக் கற்றுக்கொடுக்கும் நோக்கத்தோடு இயேசு இதைச் சொல்லித்தரவில்லை. இதிலிருக்கும் ஒவ்வொரு வேண்டுகோளும் அந்தச் சமயத்தில் யூதர்கள் அனைவரிடத்திலும் இருந்த வேதவாக்கியங்களின்மீது முழுமையாகச் சார்ந்திருந்தது. தாம் பூமிக்கு வருவதற்கு முன்னரே அவர்கள் ஜெபம் செய்திருக்க வேண்டிய காரியங்களை நினைவுபடுத்தி, அவற்றிற்காக ஜெபம் செய்யும்படி தம் சக யூதர்களுக்கு இயேசு ஊக்கமூட்டினார்.