அடிக்குறிப்பு
a “பிரசன்னம்” என்ற வார்த்தையை சில பைபிள் மொழிபெயர்ப்புகள், “வருகை” என்று மொழிபெயர்த்திருக்கின்றன. “வருகை” என்பது குறுகிய நேரம் நிகழும் சம்பவத்தைக் குறிக்கும். இது சரியான அர்த்தம் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள இயேசுவின் வார்த்தைகள் நமக்கு உதவுகின்றன. தம்முடைய பிரசன்னத்தை இயேசு, நோவாவின் காலத்தில் வந்த ஜலப்பிரளயத்தோடு ஒப்பிடாததைக் கவனியுங்கள். ஜலப்பிரளயம் என்பது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் நிகழ்ந்த ஒரு சம்பவம். ஆனால், “நோவாவின் காலம்” என்று சொன்னபோது, ஒரு முக்கிய காலப்பகுதியை இயேசு குறிப்பிட்டார். நோவாவின் காலத்தைப் போன்றே, கிறிஸ்துவின் பிரசன்னத்தின்போதும், ஜனங்கள் தங்கள் அன்றாட காரியங்களில் மும்முரமாக மூழ்கிவிடுவார்கள், கொடுக்கப்படுகிற எச்சரிப்பைக் கண்டுகொள்ள மாட்டார்கள்.