அடிக்குறிப்பு
b கடலிலிருந்து வீசுகிற ஈரப்பதமிக்க காற்று, மேலெழும்பி வருகையில் கர்மேல் மலைச் சரிவுகளில் அடிக்கடி மழையாய் பொழிவதாலும், ஏராளமான பனியைப் பெய்வதாலும் இந்தப் பகுதி பொதுவாக பச்சைப் பசேலென வளமாக இருக்கிறது. மழையைத் தருவதாக பாகாலுக்குப் புகழாரம் சூட்டப்பட்டதால், குறிப்பாக இந்த மலை பாகால் வழிபாட்டிற்குரிய முக்கியத் தலமாய் விளங்கியது. எனவே, வளமற்று, வறண்டு கிடந்த இந்தக் கர்மேல் மலை, பாகால் வணக்கம் போலியானது என்பதை அம்பலப்படுத்த மிகப் பொருத்தமான இடமாய் அமைந்தது.