அடிக்குறிப்பு
a “பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்” என்று இயேசு சொன்னார். (மத். 5:48) அப்படியென்றால், அபூரண மனிதர்களும் ஒரு கருத்தில் பரிபூரணமாக அல்லது முழுமையாக இருக்க முடியும் என்பதை அவர் அறிந்திருந்தார். மற்றவர்களை மனதார நேசிக்க வேண்டுமென்ற கட்டளையை நம்மால் கடைப்பிடிக்க முடியும்; இவ்விதத்தில் கடவுளைச் சந்தோஷப்படுத்த முடியும். யெகோவாவோ முழு கருத்தில் பரிபூரணமானவர். அவருடைய விஷயத்தில் “உத்தமம்” என்ற வார்த்தை பரிபூரணத்தையும் உட்படுத்துகிறது.—சங். 18:30, NW.