அடிக்குறிப்பு
a பலிசெலுத்தப்பட்ட மிருகத்தின் இரத்தமே பாவநிவிர்த்தி செய்தது; அந்த இரத்தத்தைக் கடவுள் பரிசுத்தமானதாகக் கருதினார். (லேவியராகமம் 17:11) அப்படியென்றால், ஏழை எளியோர் காணிக்கையாகச் செலுத்திய மாவு மதிப்பற்றதாக இருந்ததா? இல்லை. அவர்கள் மனத்தாழ்மையோடும் மனப்பூர்வமாகவும் அந்தக் காணிக்கைகள் செலுத்தியதை யெகோவா உயர்வாக மதித்தார். அதோடு, வருடாந்தர பாவநிவாரண நாளில் யெகோவாவுக்குச் செலுத்தப்பட்ட மிருகங்களின் இரத்தம், ஏழைகள் உட்பட அந்தத் தேசத்தார் அனைவருடைய பாவங்களையுமே போக்கியது.—லேவியராகமம் 16:29, 30.