அடிக்குறிப்பு
a இஸ்ரவேலர் எகிப்திலிருந்து விடுதலையாகி வந்த பிறகு, கடவுள் ஆபிரகாமுக்கு வாக்குக் கொடுத்திருந்த தேசத்தில் நுழைவதற்குத் தயாராக இருந்தார்கள். ஆனால், அத்தேசத்தை வேவுபார்க்கச் சென்ற பத்துபேர் திரும்பி வந்து சொன்ன தவறான செய்தியைக் கேட்ட மக்கள் மோசேக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள். அதனால், அவர்கள் அந்த வனாந்தரத்திலேயே 40 வருடங்கள் கழிக்கும்படி யெகோவா தீர்ப்பளித்தார்; அந்தக் கலகக்கார சந்ததியார் அனைவரும் செத்து மடிவதற்கு அது போதுமான காலமாய் இருந்தது.