அடிக்குறிப்பு
a இந்த அடையாளப்பூர்வ ஒலிவ மரம், பூர்வ இஸ்ரவேலருக்குப் படமாக இருக்கவில்லை. பூர்வ இஸ்ரவேலரில் சிலர் ராஜாக்களாகவும் சிலர் குருமார்களாகவும் ஆனபோதிலும், இஸ்ரவேல் தேசம் ஒரு குருத்துவ ராஜ்யமாக ஆகவில்லை. இஸ்ரவேலின் ராஜாக்கள் குருமார்களாகச் சேவிக்கக் கூடாதெனத் திருச்சட்டம் சொன்னது. ஆகவே, பூர்வ இஸ்ரவேலர் இந்த அடையாளப்பூர்வ ஒலிவ மரத்திற்குப் படமாக இருக்கவில்லை. ஒரு ‘குருத்துவ ராஜ்யத்தை’ உருவாக்க வேண்டுமென்ற கடவுளுடைய நோக்கம் எவ்வாறு அடையாளப்பூர்வ இஸ்ரவேலரில் நிறைவேறுகிறது என்பதைத்தான் பவுல் இந்த உதாரணத்தின் மூலம் விளக்குகிறார். இந்த விளக்கம், ஆங்கில காவற்கோபுரம், ஆகஸ்ட் 15, 1983 பிரதியில், பக்கங்கள் 14-19-ல் கொடுக்கப்பட்ட விளக்கத்தை மாற்றீடு செய்கிறது.