அடிக்குறிப்பு
a சுமார் கி.பி. 55-ல் பிறந்த டசிட்டஸ் என்பவர் இப்படி எழுதினார்: “கிறிஸ்து என்ற பெயரில் இருந்துதான் [கிறிஸ்தவர்கள்] என்ற பெயர் வந்தது. திபேரியு ஆட்சி செய்த காலத்தில், எங்கள் மாகாண அதிகாரியாக பொந்தியு பிலாத்து இருந்தபோது கிறிஸ்துவுக்கு அதிக பட்ச தண்டனை வழங்கப்பட்டது.” சுடோனியஸ் (கி.பி. 69-ல் பிறந்தவர்), யூத வரலாற்று ஆசிரியர் ஜொஸிஃபஸ் (கி.பி. 37 அல்லது 38-ல் பிறந்தவர்), பித்தினியாவின் ஆளுநர் இளைய பிளைனி (கி.பி. 61 அல்லது 62-ல் பிறந்தவர்) போன்றவர்களும் இயேசுவைப் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்கள்.