அடிக்குறிப்பு
a தள்ளுபடி ஆகமங்களின் ஒன்றாகிய ஏனோக்கின் புத்தகத்திலிருந்து யூதா இந்த வார்த்தைகளை எழுதியிருக்கலாம் என்று சில பைபிள் அறிஞர்கள் சொல்கிறார்கள். இந்தப் புத்தகத்தை ஏனோக்கு எழுதினார் என்று தவறாக நம்பப்படுகிறது. ஆனால், ஏனோக்கின் தீர்க்கதரிசனம் அதில் துல்லியமாக இருந்தது. பழங்காலத்து பதிவுகள் ஒன்றிலிருந்து அது எழுதப்பட்டிருக்கலாம். இப்போது நம்மிடம் அந்தப் பதிவு இல்லை. அது வாய்மொழியாக சொல்லப்பட்டிருக்கலாம் அல்லது எழுத்துவடிவில் இருந்திருக்கலாம். ஏனோக்கைப் பற்றி அந்தப் பழங்காலத்து பதிவில் இருந்தோ அல்லது இயேசுவிடம் இருந்தோ யூதா தெரிந்துகொண்டிருக்கலாம். ஏனென்றால் ஏனோக்கு பூமியில் வாழ்ந்ததை இயேசு பரலோகத்தில் இருந்து பார்த்திருப்பார்.