அடிக்குறிப்பு
c சகோதர சகோதரிகள் அகதிகளாக வந்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்ட உடனே, யெகோவாவின் சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில், அதிகாரம் 8, பக்கம் 87, பாரா 2-ல் இருக்கிற வழிநடத்துதலின்படி மூப்பர்கள் செய்ய வேண்டும். அகதிகளுடைய சொந்த நாட்டில் இருக்கிற சபையைத் தொடர்புகொள்ள jw.org மூலமாக தங்கள் கிளை அலுவலகத்துக்கு எழுத வேண்டும். அதே சமயத்தில், அகதியாக வந்திருப்பவர் ஆன்மீக ரீதியில் எப்படி இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள, அவருடைய சபையைப் பற்றியும், ஊழியம் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றியும் மூப்பர்கள் அகதியிடம் விவேகமாக கேட்டு தெரிந்துகொள்ளலாம்.