அடிக்குறிப்பு
a யெகோவாவுக்கு ரொம்ப நாளாகச் சேவை செய்துகொண்டிருக்கிற யாராவது ஒருவர், ‘இவ்வளவு வருஷம் இந்த உலகம் இருக்கும்னு நான் நினச்சுகூட பாக்கல’ என்று சொன்னதைக் கேட்டிருக்கிறீர்களா? யெகோவா இந்த உலகத்துக்கு முடிவு கொண்டுவர வேண்டும் என்று நாம் எல்லாருமே ஆசைப்படுகிறோம். அதுவும் இந்தக் கஷ்டமான காலத்தில், முடிவு சீக்கிரம் வந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கிறோம். ஆனால், பொறுமையாக இருப்பதற்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படிப் பொறுமையாக இருப்பதற்கு உதவும் பைபிள் நியமங்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். முக்கியமாக, எந்த இரண்டு விஷயங்களில் நாம் பொறுமையாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றிப் பார்ப்போம். அதோடு, பொறுமையாக இருப்பதால் நமக்கு என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்பதைப் பற்றியும் பார்ப்போம்.