அடிக்குறிப்பு
b படவிளக்கம்: சின்னக் குழந்தையிலிருந்தே ஒரு சகோதரி யெகோவாவிடம் தொடர்ந்து ஜெபம் செய்கிறார். சின்ன வயதில் எப்படி ஜெபம் செய்வது என்று அவருடைய அப்பா அம்மா சொல்லிக்கொடுக்கிறார்கள். டீனேஜ் பருவத்தில் பயனியர் செய்ய ஆரம்பிக்கிறார். ஊழியத்தை நன்றாகச் செய்வதற்கு உதவிகேட்டு யெகோவாவிடம் ஜெபம் செய்கிறார். சில வருஷங்களுக்குப் பின்பு, அவருடைய கணவருக்கு உடம்பு முடியாமல் போய்விடுகிறது. அந்தச் சூழ்நிலையைச் சமாளிப்பதற்கு உதவச் சொல்லி யெகோவாவிடம் கெஞ்சிக் கேட்கிறார். இன்றைக்கு அவருடைய கணவர் உயிரோடு இல்லை. ஆனாலும், வாழ்க்கை முழுவதும் எப்படி அவர் தொடர்ந்து ஜெபம் செய்தாரோ, அதே மாதிரி இன்றைக்கும் செய்கிறார். அந்த ஜெபத்தை யெகோவா கேட்பார் என்று உறுதியாக நம்புகிறார்.