அடிக்குறிப்பு
a நம்முடன் ஒருவர் பைபிளைப் படிக்கும்போது நாம் ரொம்ப சந்தோஷப்படுகிறோம். ஆனால், நமக்கு ஒரு பைபிள் படிப்புகூட இல்லையென்றால் அப்படியே சோர்ந்துவிடுவோம். ஒருவேளை, உங்களோடு பைபிளைப் படிப்பவர் எந்த முன்னேற்றமும் செய்யாமல் இருக்கலாம். உங்களுடைய பைபிள் மாணவர்களில் ஒருவர்கூட இதுவரை ஞானஸ்நானம் எடுக்காமல் இருக்கலாம். அப்படியென்றால், சீஷராக்கும் வேலையில் நீங்கள் தோற்றுவிட்டீர்கள் என்று அர்த்தமா? நீங்கள் சொல்லும் செய்தியை மக்கள் காதுகொடுத்துக் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி, உங்களால் வெற்றிகரமாக ஊழியம் செய்ய முடியும், சந்தோஷமாகவும் இருக்க முடியும். இதைப் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.